Published : 21 Jan 2020 10:09 AM
Last Updated : 21 Jan 2020 10:09 AM

தெலங்கானாவில் முதல்முறை முக அடையாளம் மூலம் வாக்களிக்கும் முறை

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 120 நகராட்சிகளுக்கும், 9 மாநகராட்சிகளுக்கும் 22-ம் தேதி(நாளை) தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 25-ம் தெதி வெளியிடப்படும். இந்நிலையில், மெட்சால் - மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ளகோம்பள்ளி நகராட்சியில் முக அடையாளம் மூலம்வாக்குச் செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக கோம்பள்ளி நகராட்சியில் உள்ள 10 வாக்குச் சாவடியில் முக அடையாளம் (face recognition) மூலம்வாக்குச் செலுத்தும் முறை அமல்படுத்தப்படவுள்ளது.

அதாவது, வாக்குச் செலுத்த வரும் வாக்காளர்களை, தேர்தல் ஆணையத்தின் செல்போன் செயலி மூலம், கூடுதல் வாக்குச்சாவடி அதிகாரி புகைப்படம் எடுப்பார். பின்னர், அவரது படம் தெலங்கானா மாநில தொழில்நுட்ப சேவைகளில் (டிஎஸ்டிஎஸ்) உள்ள தகவல்களுடன் ஒப்பிடப்படும். அது சரியாக இருக்கும்பட்சத்தில், வாக்குச்சீட்டு உள்ளிட்ட பிற அடையாள அட்டைகள் ஒப்பிடப்பட்டு, வாக்காளர்கள் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த தகவல் பரிமாற்றம் மற்றும் குறியாக்கம் (Encryption, Decryption) முறையில் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x