Published : 21 Jan 2020 07:46 AM
Last Updated : 21 Jan 2020 07:46 AM

சென்னையில் 24-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங் களும் இணைந்து வரும் 24-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வே.விஷ்ணு, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெறுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 24-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 24-ம் தேதி காலை 10 முதல் பகல் 2 மணி வரை முகாம் நடக்கிறது.

இதில், 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியுடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம். இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள், ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்துக்கான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இச்சேவைக்கு கட்டணம் எதுவுமில்லை. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x