Published : 20 Jan 2020 07:51 AM
Last Updated : 20 Jan 2020 07:51 AM
சென்னை
பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதும் வகையில் பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுட ன் கலந்துரையாடும் நிகழ்ச்சி 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 66 பேர் உட்பட நாடு முழுவதும் 2,000 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதை காண நாடு முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், நிகழ்ச்சியை கண்டுகளித்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அவர்களின் கருத்துகளை உள்ளடக்கிய அறிக்கையை புகைப்படங்களுடன் தயாரித்து தலைமை ஆசிரியர்கள், இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி
புதுடெல்லி
தேச தந்தை மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு அனில் டுட்டா சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவ்வே மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த வெள்ளிகிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. எந்தவொரு முறையான அங்கீகாரத்துக்கும் விருதுக்கும் அப்பாற்பட்டு மக்கள் அவரை மிகவும் மதிக்கிறார்கள். விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT