Published : 18 Jan 2020 12:04 PM
Last Updated : 18 Jan 2020 12:04 PM

பிரதமர் மோடியுடன் பேச தமிழக மாணவர்கள் 66 பேர் தேர்வு: ஏற்பாடுகள் தீவிரம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நிகழ்த்தும் உரையில் கலந்துகொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதற்காக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம் என்றும் தேர்வுகள் குறித்தும் அது சம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க, சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து 1,050 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் வரும் 20-ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x