Published : 18 Jan 2020 07:23 AM
Last Updated : 18 Jan 2020 07:23 AM

கே.வி. பள்ளிகளில்பொங்கல் பண்டிகைக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பொங்கல் பண்டிகைக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை அளித்துள்ள விவகாரம் சர்ச்சையாகிஉள்ளது. இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 3 நாட்கள் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கடந்த 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் என 3 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதற்காக இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் சில சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் பொங்கல் நாளில் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 16, 17-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கியுள்ளன. மேலும், இந்த 2 நாட்களும் அனுமதியின்றி விடுமுறை எடுக்கவும், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயமாக வகுப்புக்கு வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேவி பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, ‘‘அந்தந்த மாநிலங்களின் கலாச்சார பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள் பொங்கல் பண்டிகைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் மட்டுமே விடுப்பு அளித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x