Last Updated : 14 Jan, 2020 02:44 PM

 

Published : 14 Jan 2020 02:44 PM
Last Updated : 14 Jan 2020 02:44 PM

விருதுநகரில் சிறப்புப் பள்ளி மாணவர்கள் கொண்டாடிய 'அரும்புகள் தைப்பொங்கல்' விழா

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் செயல்படும் 21 சிறப்பு பள்ளிகளில் அரும்புகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டம் இங்கி வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு தொடர் கல்வி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் 21 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இச்சிறப்புப் பள்ளிகளில் "அரும்புகள் தைப்பொங்கல்-2020" என்ற தலைப்பில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, சிறப்புப் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x