Published : 13 Jan 2020 05:54 PM
Last Updated : 13 Jan 2020 05:54 PM
தென்காசியில் இன்று மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அருகில் பேரணியை ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
நிகழ்ச்சியில், கோட்ட கலால் அலுவலர் முருகுசெல்வி, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிக்ழமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், முருகன், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT