Published : 13 Jan 2020 02:20 PM
Last Updated : 13 Jan 2020 02:20 PM
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சி இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கியது.
இதில் சிறந்த 11 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தேசிய அறிவியல் தொழில் நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் திறமைமிக்க மாணவர்களை தேர்வு செய்து, "இன்ஸ்பயர் அவார்ட்ஸ் - மானாக்” விருதுக்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது.
இந்த விருதைப் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த 55 மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி கே.வி.எஸ். மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இக்கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கிவைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சீனிவாசன், சண்முகநாதன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சின்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுடெல்லி தேசிய புத்தாக்க அறக்கட்டளை சார்பில் மெரின் டயானா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் சார்பில் டேவிட் பொன்னுதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கண்காட்சி நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார். இதில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் படைப்புகளாக மழைநீர் சேகரிப்பு, அணு மற்றும் அனல் மின் நிலையம் சோலார் சிட்டி, தீ பிடித்தால் தானே தீயை அணைக்கும் முறை, செயற்கைக்கோள், மூலிகை தாவரங்கள், தானியங்கி வேக கட்டுபாட்டுக் கருவி, நெகிழி பயன்படுத்தினால் ஆயுளுக்கு உண்டாக்கும் கேடு போன்ற பல அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் சிறந்த 11 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் மிக சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்க பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT