Published : 10 Jan 2020 11:49 AM
Last Updated : 10 Jan 2020 11:49 AM

டெஸ்ட் கிரிக்கெட்டை சுருக்க வேண்டாம் குல்தீப் யாதவ் கருத்து

டெஸ்ட் போட்டிகளை 4 நாள் போட்டியாக சுருக்காமல் 5 நாள் போட்டியாகவே நடத்த வேண்டும் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புனேவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெஸ்ட் போட்டிகள் 5 நாள் போட்டிகளாகவே நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

டெஸ்ட் போட்டி என்பது 5 நாட்களில் விளையாட வேண்டிய போட்டியாகும். இதை நாம் சுருக்கக்கூடாது. காலம் காலமாக இருந்துவரும் சில விஷயங்களை நாம் மாற்றாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x