Published : 10 Jan 2020 11:49 AM
Last Updated : 10 Jan 2020 11:49 AM
டெஸ்ட் போட்டிகளை 4 நாள் போட்டியாக சுருக்காமல் 5 நாள் போட்டியாகவே நடத்த வேண்டும் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புனேவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெஸ்ட் போட்டிகள் 5 நாள் போட்டிகளாகவே நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
டெஸ்ட் போட்டி என்பது 5 நாட்களில் விளையாட வேண்டிய போட்டியாகும். இதை நாம் சுருக்கக்கூடாது. காலம் காலமாக இருந்துவரும் சில விஷயங்களை நாம் மாற்றாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT