Published : 10 Jan 2020 11:20 AM
Last Updated : 10 Jan 2020 11:20 AM
திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி பள்ளியின் சிறப்பை கூறும் பிரத்யேக காலண்டர், 685 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் மாநகராட்சி பள்ளியில், 685 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். புத்தாண்டையொட்டி, பள்ளியின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2020-ம் ஆண்டுக் கான பிரத்யேக காலண்டர்மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் கூறியதாவது:
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலண்டரில் பள்ளியின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், வண்ணமயமான பள்ளி கட்டிடங்கள், விசாலமான வகுப்பறைகள், செயல்பாட்டுடன் கூடிய கல்வி மற்றும் கணினி பயிற்சிகள் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளன.
பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் பரதம், சிலம்பம், யோகா, சதுரங்கப் பயிற்சிகள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருப்பது உட்பட பல்வேறு ஏற்பாடுகளும் காலண்டரில் இடம்பெற்று உள்ளன.
அதேபோல் மாணவர்களால் நடத்தப்படும் நேர்மை அங்காடி, நமது வங்கி, பள்ளியில் வழங்கப்படும் சுத்தமான குடிநீர், வளாகத்தில் வரையப்பட்டுள்ள கல்விசார் ஓவியங்கள் தொடர்பாகவும் அதில் இடம் பெற்றிருப்பது, குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோரையும் கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT