Published : 10 Jan 2020 07:16 AM
Last Updated : 10 Jan 2020 07:16 AM

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து வகை பள்ளி களுக்கும் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையின் விவரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி 3 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் 25-ம் தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடைபெறும்.

இணையதளத்தில் பதிவிறக்கம்

இதையடுத்து மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான மதிப் பெண் பட்டியல் படிவத்தை ஜனவரி இறுதி வாரத்தில் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அவற்றில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்து மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும். பிளஸ் 1 அரியர் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 25-ம் தேதிக்குள் தனியாக செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு கண்காணிப்பாளர்களாக வேறு பள்ளி ஆசிரியர்களும், அகமதிப்பீடு தேர்வு கண்காணிப் பாளர்களாக அதேபள்ளி ஆசிரியர் களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த தேர்வை அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், எவ் வித புகாருக்கும் இடமின்றி நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x