Published : 09 Jan 2020 12:04 PM
Last Updated : 09 Jan 2020 12:04 PM
சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்தனர்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை அன்று சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமையில் ஆசிரியர்கள் 18 பேர் வேட்டி, சட்டை அணிந்து வந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் கூறும்போது, "தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி குறித்து இக்கால மாணவர்கள் பலருக்கு போதிய அளவு விவரம் அறிந்திருக்கவில்லை.
ஆகவே, வேட்டி தினத்தைமுன்னிட்டு நாங்கள் வேட்டி அணிந்து வந்து மாணவர்களுக்கு தமிழர்களின் பாரம் பரிய உடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மேலும், வேட்டி அணிவதால் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை கிடைக்கும் எனவும்,பருத்தி ஆடைகள் அணிவதன் நன்மை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT