Published : 06 Jan 2020 10:50 AM
Last Updated : 06 Jan 2020 10:50 AM

இளைஞர் நாடாளுமன்றப் போட்டி: ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம் 

தேசிய அளவிலான இளைஞர் நாடாளுமன்ற போட்டிக்கு உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலாளா் ரஜனிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு சார்பில் 1996 ஆம் ஆண்டு முதல் 'இளைஞர் நாடாளுமன்றம்' தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிடம் நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த புரிதலை வளா்க்கவும், அதுதொடா்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இதன்மூலம் மாணவா்கள் இடையே ஒழுக்கம், சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் வளரும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய இளைஞர் நாடாளுமன்றப் போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் மத்திய அரசின் http://nyps.mpa.gov.in/ இணையதளம் வழியாக ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் போட்டி தொடர்பான கையேடு, புகைப்படங்கள், கட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், இளைஞர் நாடாளுமன்றப் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x