Published : 06 Jan 2020 09:34 AM
Last Updated : 06 Jan 2020 09:34 AM
ஓய்வூதிய பயனாளிகளின் ஆதார் விவரங்களை ஓய்வுதியத் திட்டத்தோடு மார்ச் 15-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்களின் பயனாளிகள், தங்களின் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட திட்டங்களோடு இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு கடந்த சிலமாதங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒடிசா அரசின் மது பாபு ஓய்வூதியத் திட்டம் (எம்பிபிஒய்) மற்றும் மத்திய அரசின் தேசிய சமூக உதவித் திட்டம் (என்எஸ்ஏபி) ஆகியவை மூலம் ஓய்வூதியம் பெறும் நபர்களின் ஆதார்எண்ணை திட்டங்களோடு இணைக்கவேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒடிசா அரசின்சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “ஓய்வூதிய திட்டங்களோடு பயனாளிகளின் ஆதாரை இணைக்கும் பணி,கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
அதன்படி, எம்பிபிஒய் பயனாளிகள் 73 சதவீதமும், என்எஸ்ஏபி பயனாளிகள் 91 சதவீதமும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 15-ம் தேதிக்குள் நூறு சதவீதம் இணைக்கப்பட்டுவிட்டனர் என்ற இலக்கை நாம் அடைவேண்டும். மேலும், எம்பிபிஒய் அல்லது என்எஸ்ஏபி திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு, ஏப்ரல் முதல் ஆதார் எண்ணை இணைக்காமல் பணம் வழங்க கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT