Published : 03 Jan 2020 01:18 PM
Last Updated : 03 Jan 2020 01:18 PM

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு: விண்ணப்பிப்பது எப்படி?

தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

1. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்
ஏப்ரல் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.01.2020 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 27.01.2020 (திங்கட்கிழமை) முதல் 31.01.2020 (வெள்ளிக்கிழமை) வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

2. தேர்வுக் கட்டண விவரம்
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-மொத்தம் ரூ.175/-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம்.

3. விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியவை

முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
* விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் / பதிவுத்தாள் நகல் / பிறப்புச் சான்றிதழ் நகல்- இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்
* ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/ சான்றிதழ்களின் நகல்களைக் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
* தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

4. ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

5. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

6. சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் - ரூ.175/- தேர்வுக் கட்டணம் செலுத்தி: 31.01.2020 அன்று மாலை 5.00 மணி வரை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x