Published : 01 Jan 2020 11:17 AM
Last Updated : 01 Jan 2020 11:17 AM

கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எப்போது திறப்பு?- உயர் கல்வித்துறை அறிவிப்பு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜனவரி 2-ம் தேதி (நாளை) திறக்கப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 19-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பள்ளிகளுக்கு, அரையாண்டு விடுமுறை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக ஜன.3 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகளைப் போல, கல்லூரி, பல்கலைக்கழகங்களும் ஜன.4-ம் தேதி திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து உயர் கல்வித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி கட்டாயமாக, ஜனவரி 2-ம் தேதி (நாளை) கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x