Published : 29 Dec 2019 08:00 AM
Last Updated : 29 Dec 2019 08:00 AM

பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெற அவகாசம் ஜன.11 வரை நீட்டிப்பு; சான்றுகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை

பிளஸ் 2 முடித்தவர்கள் இலவச மடிக்கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்:

2017-18 மற்றும் 2018-19-ம்ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்துதற்போது உயர்கல்வி பயிலும்மாணவர்கள் அதற்குரிய சான்றிதழ்களை பள்ளிகளில் சமர்ப்பித்து இலவச மடிக்கணினிகளை பெற்றுக் கொள்ள ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்

இதற்கான அவகாசம் கடந்தடிச.16-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. எனினும், கல்லூரிகளில் சான்றுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தகுதியான மாணவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என தகவல்கள் வந்தன.

இதையடுத்து மாணவர்கள் நலன்கருதி இலவச மடிக் கணினி பெறுவதற்கான கால அவகாசம் ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தகாலத்துக்குள் உரிய சான்றிதழ்களை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து மடிக்கணினி களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், கூடுதலாக மடிக் கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மீதம் இருந்தாலோ அதன் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x