Last Updated : 27 Dec, 2019 04:11 PM

 

Published : 27 Dec 2019 04:11 PM
Last Updated : 27 Dec 2019 04:11 PM

2019-ல் மட்டும் 150 பொருட்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம்: ஐஐடி டெல்லி சாதனை

ஐஐடி டெல்லி 2019-ல் மட்டும் 150 பொருட்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து சாதனை படைத்துள்ளது.

சிக்னல்களைப் பரிமாறி, புல்லட்ப்ரூஃபாகச் செயல்படும் ஆடை, பிளாஸ்டிக் கழிவில் இருந்து திரவ வடிவிலான ஹைட்ரோகார்பன் என ஏராளமான பொருட்கள் ஐஐடி டெல்லி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் அதிகபட்சமாக 2019-ம் ஆண்டில் 150 பொருட்களுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி டெல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'எஃப்ஐடிடி சார்பில் தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமை கோரி பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி டெல்லி இயக்குநர் ராம்கோபால் ராவ் கூறும்போது, ''அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் எங்களின் வருமானமும் அதிகரித்திருக்கிறது. இதே நிலையைத் தக்கவைத்து நாட்டில் முன்மாதிரிக் கல்வி நிறுவனமாகத் திகழ்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து எரிபொருள், உட்புற காற்று மாசுபாட்டை மட்டுப்படுத்தும் கருவி, சிக்னல்களைப் பரிமாறி, புல்லட்ப்ரூஃபாகச் செயல்படும் ஆடை, பிளாஸ்டிக் கழிவில் இருந்து திரவ வடிவிலான ஹைட்ரோகார்பன், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் சிறிய கருவி என ஏராளமான பொருட்கள் ஐஐடி டெல்லி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x