Published : 27 Dec 2019 01:02 PM
Last Updated : 27 Dec 2019 01:02 PM
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரியில் நடைபெறுவதாக இருந்த மருத்துவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2''எம்ஜிஆர் பல்கலை.யில், 2020 பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, டிசம்பர் 3-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வுக்கு அபராதத் தொகை இன்றி விண்ணப்பம் அளிக்க, 2020 ஜனவரி 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT