Last Updated : 26 Dec, 2019 06:07 PM

 

Published : 26 Dec 2019 06:07 PM
Last Updated : 26 Dec 2019 06:07 PM

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி: முதல் பரிசு ரூ.15 ஆயிரம்; மத்திய அமைச்சகம் அறிவிப்பு

புள்ளியியல் சார்ந்து கட்டுரைப் போட்டியை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. இதற்கான முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29-ம் தேதி புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புள்ளியியல் தொடர்பான பிரிவுகளில் கட்டுரைப் போட்டியை நடத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்தது.

இதையடுத்து பிப்ரவரி 23-ம் தேதி, தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், கலந்துகொள்ள விரும்புவோர் முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த கட்டுரைப் போட்டியில் நிகழ்விடத்திலேயே இரண்டு தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு தலைப்பில் சுமார் 5,000 வார்த்தைகளில் கட்டுரையை எழுத வேண்டும். இதற்கு 3 மணிநேரம் வழங்கப்படும்.

முதுகலை மாணவர்கள் இதில் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர். இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகம் /கல்வி நிறுவன துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று, 2 பிரதிகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Deputy Director, Training Unit, National Statistical Office,
Ministry of Statistics & Programme Implementation, 3rd Floor, Wing-C,
Pushpa Bhawan, Madangir Road, New Delhi-110062.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: ஜனவரி 20.

இதில் வெற்றி பெறுபவர்களின் பட்டியல், புள்ளியியல் தினத்தன்று அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசுக்கு முறையே ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 5 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x