Published : 26 Dec 2019 11:22 AM
Last Updated : 26 Dec 2019 11:22 AM

புதுச்சேரியில் குழந்தைகள், ஆசிரியர்களுக்கு கலைப் போட்டிகள்: ஜன.7-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் பள்ளி, பால்பவன் சிறார்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கலைப் போட்டிகளை நடத்துகிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்போருக்கு வாய்ப்பாட்டு, ஓவியம், மாறுவேடப் போட்டி, தனி நடனம், இசைக் கருவி மீட்டல் மற்றும் வாசித்தல், நாடகம், நாட்டுப்புறக் குழு நடனம் ஆகியவை வரும் ஜனவரி 9-ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும்.

ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்போருக்கு மாறுவேடப் போட்டி, நாட்டுப்புறக் குழு நடனம், நாடகம் ஆகியவை வரும் ஜனவரி 10-ம் தேதி நடக்கும்.

ஆசிரியர்கள், ஆசிரியைகள், பால்பவன் பயிற்றுநர்கள் ஆகியோருக்குத் தனி நடனம், இசைக் கருவி மீட்டல், வாய்ப்பாட்டு ஆகியவை ஜனவரி 10-ம் தேதி நடக்கும்.

போட்டியில் தேர்வாகும் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போர், புதுச்சேரி கடற்கரை சாலையில் ஜனவரி 18-ல் நடைபெறும் வானவில் நிகழ்வில் பங்கேற்பார்கள்.

போட்டியில் பங்கேற்போர் வரும் ஜனவரி 7-ம் தேதிக்குள் பால்பவனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் அறிய விரும்புவோர் பால்பவன் தலைமையாசிரியர் பாஸ்கர ராசுவை 9442787052 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x