Published : 25 Dec 2019 10:45 AM
Last Updated : 25 Dec 2019 10:45 AM

அண்ணா பல்கலை.யில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை.யில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்கலைக்கழகத்தின் கீழ் 13 உறுப்புக் கல்லூரிகள், 3 மண்டல கல்லூரிகளில் காலியாக உள்ள 133 பேராசிரியர் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கு முதுநிலை பொறியியல் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். அதிகப்படியான பட்டதாரிகள் விண்ணப்பிக் கும் பட்சத்தில் எழுத்து மற்றும் நேர் முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விருப்பம் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x