Published : 19 Dec 2019 02:43 PM
Last Updated : 19 Dec 2019 02:43 PM
மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யுமாறு, பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு அரசு சார்பில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த ஆண்டில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, உதிரி பாகங்களைப் பொருத்தும் பணி நடைபெற்றது. சைக்கிள்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ள நிலையில் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ''மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். மாணவிகளுக்கான சைக்கிளின் முன் பகுதியில் இரும்பு வலையால் ஆன கூடை, சைக்கிளின் சக்கரத்தில் உடை சிக்காமல் இருக்க தடுப்பு வசதிகள் ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.
ஒவ்வொரு சைக்கிளிலும் அதற்கான உத்தரவாத அட்டை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதையும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT