Published : 14 Dec 2019 08:13 AM
Last Updated : 14 Dec 2019 08:13 AM

அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் கசிவு?- தேர்வுத் துறை அதிகாரிகள் மறுப்பு

நடப்பு கல்வி ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வு 11, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 11-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு 12-ம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நேற்று தொடங்கின.

இதில் 9-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. மேலும், முறையாக தேர்வுக் கட்டணம் செலுத்தாத சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள்களை அவர்களே தயாரித்துக் கொள்ள முதன் மைக் கல்வி அலுவலகம் அனுமதி அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொதுத்தேர்வு நடை பெறும் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு மட்டுமே அரை யாண்டு தேர்வுக்கான வினாத் தாள்களை தேர்வுத் துறை தயாரிக்கும். இதர வகுப்பு களுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து வழங் கப்படும். மேலும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாளைப் பின்பற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதேபோல், நோடல் மையங்களில் இருந்து தேர் வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் பள்ளிகளுக்கு கேள்வித்தாள் சென்றடையும். எனவே, வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாக வாய்ப்பு குறைவு. எனினும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும். அதேபோல், தனியார் பள்ளி களுக்கு வினாத்தாள்கள் தயாரித் துக் கொள்ள அனுமதி வழங்கியது தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட் கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x