Published : 13 Dec 2019 04:05 PM
Last Updated : 13 Dec 2019 04:05 PM

புதுமையான நீர் வழங்கல் கருவி: ரஷ்ய அதிபரின் பாராட்டைப் பெற்ற ஒடிசா சிறுவன்

புதுமையான நீர் வழங்கல் கருவியைக் கண்டுபிடித்த ஒடிசா சிறுவன், ரஷ்ய அதிபரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் பிஸ்வந்த் பாத்ரா. 9-ம் வகுப்பு படிக்கும் பாத்ரா, ரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற அதி உயர் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தில் கலந்துகொண்டார்.

நிதி ஆயோக்கின் அடல் கண்டுபிடிப்புத் திட்டம் மற்றும் ரஷ்ய அரசின் SIRIUS அமைப்பு ஆகியவை இணைந்து தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை நடத்தியது. செயல்திட்ட வடிவிலான கல்விப் பயிற்சியில் 25 இந்திய மாணவர்களும் 25 ரஷ்ய மாணவர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில், 50 மாணவர்களும் தாங்கள் கண்டுபிடித்த சமகால கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினர். தொழில்நுட்பம் மற்றும் தகவல் பகுப்பாய்வு, ஆற்றல் தூய்மை, பயோடெக், ட்ரோன்கள் மற்றும் ரோபோக்கள் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் செயல்திட்டங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் பாத்ரா காட்சிப்படுத்திய நீர் வழங்கல் கருவி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வெகுவாகக் கவர்ந்தது. பாத்ரா வடிவமைத்த கருவி குறித்து புதின் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதுதொடர்பான வீடியோவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். சிறுவனுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x