Published : 11 Dec 2019 09:42 AM
Last Updated : 11 Dec 2019 09:42 AM
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை சார்பில், திறந்வெளியில் மலம் கழித்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை செல்லம்மாள் தலைமை வகித்தார்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் கணித பட்டதாரி ஆசிரியர் சண்முகநாதன் விளக்கினார். பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT