Published : 11 Dec 2019 08:16 AM
Last Updated : 11 Dec 2019 08:16 AM

வேலைவாய்ப்புக்காக 4.28 கோடி பேர் பதிவு: அமைச்சர் தகவல்

புதுடெல்லி

நாடு முழுவதும் 2.72 கோடி ஆண்களும் 1.56 கோடி பெண்களும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பதிலளிக்கையில், “நாடு முழுவதும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு பதிவுகளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. அதன்படி, 2017-ம்ஆண்டு வரை 2.72 கோடி ஆண்களும், 1.56 கோடி பெண்களும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். 2016-ம் ஆண்டு, ஓபிசி பிரிவில் 1.16 கோடி பேரும், எஸ்சி பிரிவில் 71.5 லட்சம் பேரும், எஸ்டி பிரிவில் 25.5 லட்சம் பேரும் வேலைக்காக பதிவுச் செய்துள்ளனர்” என்றார்.

அதன்படி, 2017-ம் ஆண்டில்மட்டும் 4.28 கோடி மக்கள் வேலைக்காக பதிவுச் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x