Published : 11 Dec 2019 07:24 AM
Last Updated : 11 Dec 2019 07:24 AM

​​​​​​​‘ஆயுஷ்மான்’ திட்டத்தில் 65 லட்சம் பேருக்கு மருத்துவச் சிகிச்சை

‘ஆயுஷ்மான்’ திட்டத்தில் 65 லட்சம் பேருக்கு மருத்துவச் சிகிச்சை

புதுடெல்லி

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி சவுபே கூறியதாவது:

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு (டிசம்பர் 5 வரை) ரூ.9,549 கோடி மதிப்பில் 65,45,733 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.6,133 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய – மாநில அரசுகளின் பங்குத் தொகை, வடகிழக்கு மற்றும் இமாலய பிராந்தியத்தில் 90:10 என்ற விகிதத்திலும் பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x