Published : 11 Dec 2019 07:24 AM
Last Updated : 11 Dec 2019 07:24 AM
‘ஆயுஷ்மான்’ திட்டத்தில் 65 லட்சம் பேருக்கு மருத்துவச் சிகிச்சை
புதுடெல்லி
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து மாநிலங்களவையில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி சவுபே கூறியதாவது:
மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு (டிசம்பர் 5 வரை) ரூ.9,549 கோடி மதிப்பில் 65,45,733 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.6,133 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய – மாநில அரசுகளின் பங்குத் தொகை, வடகிழக்கு மற்றும் இமாலய பிராந்தியத்தில் 90:10 என்ற விகிதத்திலும் பிற மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்திலும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT