Published : 09 Dec 2019 03:25 PM
Last Updated : 09 Dec 2019 03:25 PM

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; எப்போது நேர்காணல்?

சார் ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 181 காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு, ஜூலை 12 முதல் 14 வரை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் இந்தத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கான நேர்முகத் தேர்வு, வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.

நேர்முகத் தேர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 362 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து, இறுதியாகத் தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியல் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x