Published : 09 Dec 2019 12:39 PM
Last Updated : 09 Dec 2019 12:39 PM
பல்கலைக்கழகங்கள் வெண்ணிற கோட்டைகளாக அல்ல, புதிய யோசனைகளின், கருத்துகளின் கூடமாக இருக்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
உத்கல் பல்கலைக்கழக 75 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''ஆசிரியர்களும் மாணவர்களும் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரின் வளர்ச்சியில் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். சமூகத்தில், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் வெண்ணிற கோட்டைகளாக அல்ல, புதிய யோசனைகளின் கூடமாக இருக்கவேண்டும். அறிவார்ந்த சமூகம் ஆய்வில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் அறிவுபூர்வ விவாதங்கள் உருவாவதுடன் மனித சமூகமும் தழைத்தோங்கும்.
தேசிய அளவிலும் உலகளாவிய முறையிலும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் உத்கல் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது'' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT