Published : 09 Dec 2019 10:38 AM
Last Updated : 09 Dec 2019 10:38 AM
மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு தொல்பொருட்களை பள்ளிமாணவ, மாணவிகள் பார்த்து வியந்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5-வது கட்ட அகழாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பானை ஓடு, சுடு மண் பொருட்கள், கீரல் எழுத்துகள் என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொருட்கள் பொதுமக்கள், மாணவர்கள் பார்வைக்காக மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை, நெல்லை, திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என தினமும்ஏராளமானோர் கீழடி தொல்பொருட்களை பார்வையிட்டுச் செல்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தொல்பொருட்களை பார்த்துவியப்படைந்தனர். மதுரை நகரில் உள்ளபல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளும் தொல்பொருட்களைப் பார்வையிட தினமும் வருகின்றனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொல்லியல் கண்காட்சியைப் பார்வை யிட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT