Published : 09 Dec 2019 10:03 AM
Last Updated : 09 Dec 2019 10:03 AM

கோவை மண்டல அளவிலான வினாடி-வினா போட்டியில் மூலனூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்

கோவை மண்டல அளவிலான வினாடி-வினா போட்டியில் மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சார்பில் மண்டல அளவிலான வினாடி-வினா போட்டி, கோவை ஒண்டிப்புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 அணிகளாக பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:48 புள்ளிகள் பெற்ற திருப்பூர் மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடமும், 47 புள்ளிகள் பெற்ற கூடலூர் தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடமும், 40 புள்ளிகள் பெற்ற ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூன்றாமிடமும், 28 புள்ளிகள் பெற்ற ஈரோடு திங்கலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நான்காமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் பரிசுகள் வழங்கினார்.

வினாடி-வினா போட்டி குறித்து ஒருங்கிணைந்த கல்வி உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கண்ணன் கூறும்போது, "கோவை மாவட்ட அளவிலான விநாடி-வினா போட்டி, நவ. 28-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் கோவை, பேரூர், எஸ்எஸ்குளம், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டதில், நாயக்கன்பாளையம், கிணத்துக்கடவு, ஒண்டிப்புதூர், மண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல அளவில் வினாடி-வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 10-ம்தேதி 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்படும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x