Published : 09 Dec 2019 09:24 AM
Last Updated : 09 Dec 2019 09:24 AM

அம்பேத்கர் பற்றிய தகவல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி

அம்பேத்கர் பற்றிய தகவல்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சட்ட மாமேதை என்று போற்றப்படும் டாக்டர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார். சமூக சீர்திருத்தவாதியான இவர்,நாட்டின் பல்வேறு உயரிய பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 1891-ம்ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்தார். தனது65-வது வயதில் 1956-ம் ஆண்டுடிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில், அம்பேத்கரின் 63-வதுஆண்டு நினைவு தினம் கடந்தவெள்ளிக்கிழமை (6-ம் தேதி) நாடு முழுவதும் அனுசரிக்கப் பட்டது.

இதற்கிடையில் அம்பேத்கரின்வாழ்க்கை வரலாறு, அவரின்தொண்டு ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, டெல்லி அரசு சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையேடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வர்அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில்,“அம்பேத்கரை தலித் மக்களின் தலைவராக நினைப்பதன்மூலம், சமூகத்திற்கு அவர் செய்த பங்களிப்பை மக்கள் குறைத்து மதிப்பிட்டுள் ளனர். இந்திய ரிசர்வ் வங்கி, பெண்கள் மற்றும் விவசாயிகள் நலன்ஆகியவற்றில் அம்பேத்கர் தனது பெரியபங்களிப்பை செய்தார் என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. எனவே அவரை பற்றிய எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு சொல்ல நாங்கள் விரும்புகிறோம்.

தற்போது வழங்கப்பட்டுள்ள கையேடு முன்மாதிரிதான். இன்னும் சில ஆண்டுகளில், 6 முதல் 8-ம்வகுப்பு பாடத்திட்டத்தில் அம்பேத்கர்பற்றிய தகவல்களை சேர்க்கவுள் ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x