Published : 09 Dec 2019 08:08 AM
Last Updated : 09 Dec 2019 08:08 AM
பெங்களூரு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்டுள்ளது.
அடுத்த நவம்பர் மாதத்தில் சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சந்திரயான்-2 திட்டத்தில் நிலவில் தரையிறங்கும் போது லேண்டர் செயலிழந்தது. ஆனால், ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருகிறது.
தற்போது நிலவில் மீண்டும் லேண்டரைத் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கு கூடுதலாக ரூ.75 கோடி நிதி தேவை என்று மத்திய அரசிடம் இஸ்ரோ கேட்டுள்ளது.
ஜெருசலேம்
இஸ்ரேல் பள்ளி மாணவர்கள் 3 பேர் உருவாக்கிய செயற்கைக்கோளை இஸ்ரோ டிசம்பர் 11-ம் தேதி விண்ணில் ஏவுகிறது.
இஸ்ரேலில் உள்ள ஷார் ஹானேகேவ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அலோன் அப்ரமோவிச், மீட்டாவ் அசுலின் மற்றும் சாமுவேல் அவிவ் லெவி. இவர்கள் சுமார் இரண்டரை ஆண்டுகள் முயற்சி செய்து ‘துச்சிஃபாட் 3’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் வரும் 11-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது.
மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள், பூமியை கண்காணிக்கவும், விவசாயிகளுக்கு பயனுள்ளதாகவும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் எடை 2.3 கிலோ. இஸ்ரேல் மாணவர்கள் தயாரித்த 3-வது செயற்கைக்கோள் ‘துச்சிஃபாட்’ என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT