Published : 06 Dec 2019 12:45 PM
Last Updated : 06 Dec 2019 12:45 PM
சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப் பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய இடை நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் அனைத்து மண்டல அலு வலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை போதிப்பது மிகவும் அவசியமானது.
இதுகுறித்து ராமகிருஷ்ணா மிஷன் பிரத்யேக பாடத் திட்டங்களை உருவாக்கி புத்தகங்கள் தயாரித்துள்ளது. அந்த புத்தகங்கள் உதவியுடன் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி சார்ந்த பாடத்தை கற்றுத்தரலாம்.
அதேநேரம் இந்தப் பாடத்தை பள்ளிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT