Published : 06 Dec 2019 10:17 AM
Last Updated : 06 Dec 2019 10:17 AM
அகில இந்திய தேசிய குழந்தைகள் மாநாட்டுக்கு சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி நிகிலா ஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி க.ச.நிகிலாஸ்ரீ.
இவரது ‘எனது வட்டாரத்தில் பார்த்தீனியம் பற்றிய ஆய்வு மற்றும் கட்டுப்படுத்த நடவடிக்கை’ என்ற ஆய்வுக் கட்டுரை மற்றும் சோதனை செய்முறை சென்னையில் மண்டல அளவில் நடந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் முதலிடம் பெற்றது. தொடர்ந்து இந்திய அளவில் போபாலில் நடந்த மாநாட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இதன் மூலம் நிகிலா ஸ்ரீ டிசம்பர் 27-ல்திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள அகில இந்திய தேசிய குழந்தைகள் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவியையும், அவருக்கு வழிகாட்டிய ஆசிரியர் ரமேஷ் பாபுவையும் பள்ளியின் முதல்வர் முத்தையா பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT