Published : 06 Dec 2019 08:31 AM
Last Updated : 06 Dec 2019 08:31 AM

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட போபண்ணா திட்டம் 

மும்பை: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக இருப்பவர் ரோஹன் போபண்ணா. தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த சில வாரங்களாக அவர் டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் உள்ளார்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரோஹன் போபண்ணா, “தோளில் ஏற்பட்டுள்ள காயம் குணமாகி வருவதால் நான் மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளேன். அடுத்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. காயம் முழுவதும் குணமாகும் பட்சத்தில் கத்தார் ஓபன் டென்னிஸில் ஆடுவேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x