Published : 06 Dec 2019 08:16 AM
Last Updated : 06 Dec 2019 08:16 AM
இந்திய பொருளாதார மண்டலத்துக்கு உட்பட்ட அந்தமான் கடல் பகுதிக்குள், கடந்த செப்டம்பர் மாதம் அனுமதியுமின்றி நுழைந்த சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பலை இந்தியக் கடற்படையினர் விரட்டியடித்ததாக கடற்படை தலைமை தளபதி கரம்வீர் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலளிக்கையில், “இந்தியா-சீனா எல்லையில் சீன படைகள் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகின்றன. அதை தடுக்கும் வகையில் நமது பாதுகாப்பு படைகளும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இந்த அத்துமீறல்கள் நடக்கிறது. நமது பாதுகாப்பு படைவீரர்கள் எப்போதும் எச்சரிக்கையாக உள்ளதால், நமது எல்லைப் பகுதி பாதுகாப்பாக உள்ளது” என்றார். இந்நிலையில், இந்தியா- சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யி-இன் இம்மாத இறுதி இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT