Published : 05 Dec 2019 12:17 PM
Last Updated : 05 Dec 2019 12:17 PM

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா: அமைச்சரவை ஒப்புதல்

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தற்போது இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலைகள் மத்தியப் பல்கலைக்கழகங்களாக விரைவில் மாற்றப்படும் என்றார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங், சமஸ்கிருத மொழியைக் கற்பிக்கும் 3 பல்கலைகளையும் மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்ற உள்ளதாக அறிவித்திருந்தார்.

டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான், ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம் ஆகியவையே மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட உள்ளன. சமஸ்கிருத அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களின் வேண்டுகோளை முன்னிட்டு, இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. அவற்றில் 40-ஐ மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019, மூத்த குடிமக்கள் நல மசோதா ஆகியவற்றை மக்களவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x