Published : 05 Dec 2019 10:37 AM
Last Updated : 05 Dec 2019 10:37 AM
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி, ஹைதராபாத்தில் நாளைநடக்கிறது.
இதை முன்னிட்டு மேற்கிந்திய தீவுகள்அணியின் கேப்டன் பொலார்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:டி20 கிரிக்கெட் போட்டியில் வலிமை வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து நாங்கள் ஆடவுள்ளோம்.
இதில் வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும் இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. இதேபோன்று இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக ஆட முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT