Published : 05 Dec 2019 10:16 AM
Last Updated : 05 Dec 2019 10:16 AM

ஆராய்ச்சி திட்டத்தில் தேர்வான கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு 

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ‘இந்தியா வின் வளரும் பொருளாதார ஒழுங்கு ஆராய்ச்சி திட்டம்’ (ஸ்ட்ரெய்டு ) என்ற திட்டத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஜூலையில் அறிமுகம் செய்தது.

அதன்படி நடப்பாண்டு ஸ்ட்ரெய்டு திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 16 பல்கலைக்கழகங் கள் மற்றும் 19 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக்கழ கம், திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம், அவினாசி லிங்கம் நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களும், வ.உ.சி. கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம் மாள் கல்லூரி ஆகிய 3 கல்லூரி களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக நிதியுதவி வழங்கப் படும். இத்தகவலை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x