Published : 04 Dec 2019 04:35 PM
Last Updated : 04 Dec 2019 04:35 PM
ஐயப்ப பக்தர்களின் கருப்பு ஆடையை அணிந்து பள்ளிக்கு வந்த 5-ம் வகுப்பு மாணவரை, வகுப்புக்குள் ஆசிரியர் அனுமதிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், ''சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள், கருப்பு நிற ஆடையை அணிவது வழக்கம். அந்த வகையில், தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டைத்தைச் சேர்ந்த சிறுவன் ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார். யாதாதிரியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அவர், கருப்பு ஆடையுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்குச் சென்றார்.
அதைப் பார்த்த ஆசிரியை இந்த ஆடையுடன் வகுப்புக்குள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பியுள்ளார். இதைக் கேள்விப்பட்டு அங்குள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், கடந்த 16 நாட்களாக சிறுவன் பாட வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினர்.
கடந்த காலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்தப் பள்ளியை உடனே மூட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
எனினும் போராட்டத்தை அடுத்து, பள்ளி முதல்வர் இதில் தலையிட்டு பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தார்'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT