Last Updated : 04 Dec, 2019 11:41 AM

 

Published : 04 Dec 2019 11:41 AM
Last Updated : 04 Dec 2019 11:41 AM

மிக விரைவில் புதிய கல்விக் கொள்கை வெளியாகிறது: மத்திய அமைச்சகம்

செயலாளர் ஆர்.சுப்பிரமணியம்

மிக விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை பொதுவெளியில் வெளியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏஐசிடியில் நேற்று தூய்மையான வளாகம் 2019-க்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வீடியோ கான்ஃபரன்சிங் முறயில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ''தினந்தோறும் மாணவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேமிக்கவேண்டும் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும், தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதைப் பின்பற்றுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் (உயர் கல்வி) ஆர்.சுப்பிரமணியம் கூறும்போது, ''புதிய தேசிய கல்விக் கொள்கை பொதுவெளியில் மிக விரைவில் வெளியாக உள்ளது.

கல்விக் கொள்கையை வெளிக்கொண்டு வருவதன் கடைசிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். நம்முடைய கல்வி முறையைச் செயல்படுத்தும் முறைகளை, இந்த புதியக் கல்விக்கொள்கை மாற்றியமைக்கும். மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மிகப்பெரிய மாற்றத்தை கல்விக் கொள்கை கொண்டுவரப் போகிறது'' என்று சுப்பிரமணியன் பேசினார்.

தூய்மையான வளாகம் 2019-க்கான விருதுப் போட்டியில் சுமார் 7 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் 52 நிறுவனங்களுக்கு 'தூய்மையான மற்றும் நேர்த்தியான வளாகம்' என்ற விருது வழங்கப்பட்டது.
---

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x