Published : 04 Dec 2019 07:47 AM
Last Updated : 04 Dec 2019 07:47 AM
கழிவுநீர் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கடலில் கலப்பது தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடலோர பகுதிகளில் மாசு குறித்தும், அதற்காக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் தொழில்துறை மற்றும் நகராட்சி கழிவுகள் வெளியேற்றுவது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை.
எனவே, அனைத்து கடலோர பகுதிகளிலும் மாசு கட்டுப்பாடு மற்றும் அதன் வழிமுறைகள் பற்றிய விரிவாக அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் 3 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல், கடலோர பகுதிகளை கொண்ட மாநிலங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியம், கடலில் கலக்கும்கழிவுகளை தடுக்கும் செயல்திட்டத்தின் விரிவான அறிக்கையை இன்னும் ஒரு மாதத்தில் தாக்கல்செய்யவேண்டும். இந்த உத்தரவைபின்பற்ற மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறும் பட்சத்தில் தாமதிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஓடிசா,குஜராத், லட்சத்தீவு, கோவா, புதுச்சேரி, டையூ-டாமன், அந்தமான்-நிக்கோபார் தீவுகள், தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT