Published : 02 Dec 2019 05:47 PM
Last Updated : 02 Dec 2019 05:47 PM
பள்ளியில் ஏமாற்றுபவர்கள் வேலையிடங்களிலும் ஏமாற்றுவார்கள் என்று சமீபத்திய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். சுமார் 250 இளங்கலை மார்க்கெட்டிங் மாணவர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
ஆய்வுக்காக அவர்களிடம் வகுப்பறைகளில் ஏமாற்றி இருக்கிறீர்களா? தேர்வுகளின்போது அடுத்த மாணவர்களைப் பார்த்து காப்பி அடித்திருக்கிறீர்களா? வேலை இடங்களில் மோசமான அணுகுமுறையைக் கையாண்டதுண்டா? என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆய்வின் முடிவில் கூறப்பட்டிருப்பதாவது:
''பள்ளிகளில் ஏமாற்றும் என்ணத்தைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, வேலையிடங்களிலும் ஒழுக்கக் குறைவாக நடந்துகொள்ளும் நிலை ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் போக்கு அவர்களுடனேயே காலத்துக்கும் தொடர்கிறது என்று கண்டறியப்பட்டது.
சில மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்னும் அழுத்தம் குடும்பத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. பிரச்சினைகளைத் தவிர்க்க அவர்களும் ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் பள்ளிக் காலத்திலேயே மாணவர்களின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளைக் கண்டறிந்து அவற்றைக் குறைக்கும் வழிகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். நெறிமுறைகளுடன் மாணவர்கள் நடந்துகொள்ளப் பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வேலை பார்க்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை நேர்மையான வழியில் கையாள்வர். அதுவே சிறப்பான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்''.
இவ்வாறு ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT