Published : 02 Dec 2019 10:31 AM
Last Updated : 02 Dec 2019 10:31 AM

கோவையில் தேசிய மாணவர் படை முகாம்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு-2 சார்பில், தேசிய மாணவர் படை முகாம், கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இம்முகாமில் கோவை அரசு கலைக்கல்லூரி, ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேவாங்க மேல்நிலைப்பள்ளி, கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி, பிஷப் அப்பாசாமி கல்லூரி, செயின்ட் அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி, எஸ்எஸ்விஎம் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு தேசிய மாணவர் படை கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரிஷ் பர்தான் தலைமையில் ராணுவ வீரர்கள் ராம் வக்கில் யாதவ், மூர்த்தி, பல்வான்சிங், மணிகண்டன், ராம்ஜி, பாண்டியன், தேசிய மாணவர் படை அலுவலர்கள் சுதாகர், காமராஜ், ஆண்டனி, ஆல்பர்ட் அலெக்ஸாண்டர், பெலிக்ஸ், ஜாகீர் உசைன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இது குறித்து தேசிய மாணவர் படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு ராணுவத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள், அணிவகுப்பு பயிற்சி, முதலுதவி பயிற்சி, கூடாரம் அமைத்தல், வரைபடம் மூலம் இடங்களைக் கண்டறி
தல், பேரிடர் மேலாண்மை, முதலுதவி செய்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேலும், கால்பந்து, கபடி, ஹாக்கி, தொலைதூர ஓட்டம், துப்பாக்கிச் சுடுதல், அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தூய்மை இந்தியா, எய்ட்ஸ் விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடும் விழா, இலவச கண்பரிசோதனை முகாம் மற்றும் பல்வேறு சமூக சேவைகளை மாணவர்கள் மேற்கொண்டனர். முகாமின் நிறைவு நாளான நவம்பர் 30-ம் தேதி அன்று மெகா அணிவகுப்பும், துப்பாக்கி சுடுதல் போட்டியும் நடத்தப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x