Published : 02 Dec 2019 09:59 AM
Last Updated : 02 Dec 2019 09:59 AM
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 பதவிகளில் காலியாக உள்ள 1,338 பணியிடங்களுக்கான முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வுகள் கடந்தாண்டு நவம்பர் 11 மற்றும் பிப்ரவரி 23-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு 2,667 தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நேர்முகத் தேர்வு கடந்த நவ.6 தொடங்கி 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் www.tnpsc.gov.in www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தரவரிசை அடிப்படையில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT