Published : 02 Dec 2019 08:44 AM
Last Updated : 02 Dec 2019 08:44 AM
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கும் புதிய செல்போன் செயலி மற்றும் மாணவிகளை பாதுகாப்பு படையில் சேர்க்க சிறப்பு பயிற்சி ஆகியவற்றை மத்திய பிரதேச பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பிரபுராம் சவுத்ரி கூறியதாவது:
மத்திய பிரதேச மாநிலத்தின் கல்வியின் தரத்தை உயர்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை தென் கொரியாநாட்டுக்கும், டெல்லி, நொய்டா போன்ற மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்
ளது. இதில், பல ஆசிரியர்களும், அதிகாரிகளும் கல்வி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்களை டிஜிட்டல் முறையில் இணைக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்களின் வகுப்பு தேர்வுகளையும், பாடம் தொடர்பாக கேள்விகளையும் இந்த செயலியில் முன்வைக்கலாம். அதற்கு மாணவர்கள் பதில் அளிக்கும் முறைகள் இந்த செயலியில் உள்ளது. இந்த செயலியை பெற்றோர்களும் கண்காணிக்கலாம். தற்போது போபால் மற்றும் ரைசன் மாவட்டங்களில் உள்ள 13 அரசுபள்ளிகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்
டுள்ளது. இந்த செயலியானது தென் கொரியாவில் உள்ள பள்ளிகளின் நடைமுறையில் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசு பள்ளி மாணவிகளை போலீஸ் மற்றும் பாதுகாப்புத்துறையில் சேர தேவையான சிறப்பு பயிற்சிகள் பள்ளியில் நடத்தப்படவுள்ளது. மாவட்டத்துக்கு குறைந்தது 50 மாணவிகளையாவது பாதுகாப்புத் துறை யில் இணைக்க நடவடிக்கை எடுக்கப் படும். இதனால், பெண்களுக்கு சமூகத் தில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்.
இவ்வாறு பிரபுராம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT