Published : 30 Nov 2019 04:31 PM
Last Updated : 30 Nov 2019 04:31 PM

ஈரானில் காற்று மாசு: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஈரானில் காற்று மாசு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஈரானில் சில நாட்களாக காற்று மாசு நிலவுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காற்று மாசுக் காரணமாக மாணவர்களுக்கு சுவாச கோளாறு தொடர்பான உடல் நலக்கோளறுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

தெஹ்ரான் துணை ஆளு நர் முகமத் இது குறித்து கூறும்போது, “வரும் நாட்களில் காற்றில் மாசின் அளவு அதிகரிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு மற்றும் பல்கலைகழங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் காற்று மாசுக் காரணமாக விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மாசுக் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தின் இடைப்பட்ட பகுதிகளில் ஈரானில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. உலகில் காற்று மாசு அதிகம் உள்ள இடங்களில் ஈரானும் ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x